கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸ் பரவல் பூதாகரமாக அதிகரித்து வருகிறது.
அதனால் அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், "நான் முழு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளேன். எனக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை. இதுபோன்ற வீண் வதந்திகள் பரப்பப்படுவது வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உற்பத்தி அளவு 50% அளவிற்கே உள்ளது - அமைச்சர் எம்.சி. சம்பத்