இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு புதிய தகவலை தெரிவித்திருக்கிறது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சிக் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஆங்காங்கே மழைபெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்-29) தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும்; குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய ஏழு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டமாகக் காணப்படும் என்றும், ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தென்மாவட்டங்களில் வழக்கத்தைவிட சற்று மழை அதிகமாக பெய்யக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
'அடுத்த மாதம்வரை மழைதாங்க..!' - வானிலை ஆய்வு மையத்தின் சில்லென்ற அறிவிப்பு