சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள விசைப்படகு கட்டுமான தளத்தில் மரக்கழிவுகள் உள்ள இடத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்எஸ். ராஜேஷ், உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அத்தோடு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு படையினருடன் இணைந்து தூரிதமாக செயல்பட்டு தீயை அணைக்க உதவினார். இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாகத் தெரிவிக்கும் அப்பகுதியினர், மது அருந்திட்டு சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.
இது போன்ற விபத்துகள் ஏற்படும்போது உடனடியாக உதவ வரும் வகையில் இப்பகுதியில் நிரந்தரமான தீயணைப்புத் துறை நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:டயர் வெடித்து டீ கடையில் புகுந்த லாரி, 2 பேர் உயிரிழப்பு