ETV Bharat / state

பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த, போலி நிறுவன உரிமையாளர் கைது! - போலி நிறுவன உரிமையாளர் கைது

சென்னை: தமிழ்நாடு, ஆந்திராவில் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

போலி நிறுவன உரிமையாளர்
author img

By

Published : Sep 15, 2019, 11:27 PM IST

சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் கவிதா. இவர் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி வேலைக்கு சென்ற கவிதா வீட்டிற்குத் திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து இளம்பெண்ணை தேடி வந்த நிலையில், அவர் பணிபுரிந்த கம்பெனி உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் கவிதாவை திருப்பூரில் அடைத்து வைத்திருப்பதும் தனிப்படையினருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் கவிதாவை மீட்டனர்.

பின்னர் கவிதா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜேஷ் பிரித்வியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், போலி நிறுவனம் ஒன்றை தொடங்கி மருத்துவச் சீட்டு பெறுவதாக கூறி, பலரை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு, ஆந்திராவைச் சேர்ந்த பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து போலி ஆதார் கார்டு, பான் கார்டு் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் கவிதா. இவர் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி வேலைக்கு சென்ற கவிதா வீட்டிற்குத் திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து இளம்பெண்ணை தேடி வந்த நிலையில், அவர் பணிபுரிந்த கம்பெனி உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் கவிதாவை திருப்பூரில் அடைத்து வைத்திருப்பதும் தனிப்படையினருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் கவிதாவை மீட்டனர்.

பின்னர் கவிதா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜேஷ் பிரித்வியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், போலி நிறுவனம் ஒன்றை தொடங்கி மருத்துவச் சீட்டு பெறுவதாக கூறி, பலரை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு, ஆந்திராவைச் சேர்ந்த பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து போலி ஆதார் கார்டு, பான் கார்டு் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Intro:Body:தமிழகம்,ஆந்திராவில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைது.

சென்னை எழும்பூரில் வசித்து வரும் கவிதா என்ற பெண்மணி அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள கவின்ஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் என்ற கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி கவிதா என்ற பெண் வீடு திரும்பவில்லை என எழும்பூர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தார்.

மேலும் உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து போலிசார் தேடி வந்தனர்.விசாரணையில் அந்த பெண் பணிபுரியும் கம்பெனியின் உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி கடத்தி சென்றது தெரிய வந்தது. பின்னர் கடந்த 9ஆம் தேதி கவிதா திரூப்பூரில் ஒரு வீட்டில் அடைத்து இருப்பதாக  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலிசார் விரைந்து பெண்ணை மீட்டு வந்தனர்.

மேலும் தன்னை கடத்திய ராஜேஷ் பிரித்வி குறித்து போலிசாரிடம் கவிதா தகவல் அளித்தார்.இந்நிலையில் இன்று கவிதா வீட்டிற்கு வந்த ராஜேஷ் பிரித்வி தன்னுடன் வருமாறு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.இதை பற்றி தகவல் அறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராஜேஷ் பிரித்வியை கைது செய்தனர்.

பின்னர் விசாரணையில் போலியான நிறுவனத்தை நடத்தி மருத்துவசீட்டு பெற்று தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுப்பட்டதும்,இவரது நிறுவனத்தில் பணிபுரியும் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறினார். மேலும் தன்னை காவல் உதவி ஆய்வாளர் எனக்கூறி பலபேரிடம் மோசடியில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.பின்னர் தனது பெயரை தினேஷ்,தீனதயாளன் என மாற்றி தமிழகம்,ஆந்திரா மாநிலங்களில் 6பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.மேலும் இவரது நிறுவனத்தில் காவலர் உடை,போலிஆதார் கார்டு,பான் கார்டு ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட ராஜேஷ் பிரித்வி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.