ETV Bharat / state

200 நாடுகளின் கொடிகளைப் பெயர்களுடன் கூறி யுகேஜி மாணவர் சாதனை! - அரியலூர் மாணவர் சாதனை

அரியலூர்: 200 நாடுகளின் கொடியை வைத்து அந்நாட்டின் பெயர், தலைநகரத்தை 5 நிமிடம் 19 வினாடிகளில் கூறி யுகேஜி மாணவன் சாதனைபடைத்துள்ளார்.

Jayamkondan ukg student get global award
author img

By

Published : Oct 5, 2019, 10:14 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் சாய்கீர்த்தி என்ற மாணவர் யுகேஜி படித்து வருகிறார். அவர் படித்த பள்ளியில் 'குளோபல் புக் ரிசர்ச் பவுண்டேஷன்' சார்பில் சிறுவர்களுக்கான நுண்ணறிவு போட்டி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சாய்கீர்த்தி 5 நிமிடம் 19 வினாடிகளில் 200 நாடுகளின் தேசிய கொடியை பார்த்து அந்நாட்டின் பெயர், தலைநகரத்தை கூறி அசத்தியுள்ளார்.

இதன்மூலம் அவர், சில்ட்ரன் ரெக்கார்டு, நேஷனல் ரெக்கார்டு, ஆசிய-பசுபிக் ரெக்கார்டு, குளோபல் ரெக்கார்டு ஆகிய நான்கு பிரிவுகளில் சாதனைபடைத்துள்ளார்.

சாதனைபடைத்த சிறுவன் சாய்கீர்த்தி

இதன் பின்னர் சாய்கீர்த்திக்கு 'குளோபல் பவுண்டேஷன்' சார்பில் நான்கு பிரிவுகளில் சாதனைபடைத்தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும், இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு பரிந்துரைக்கப்படவுள்ளதாக குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்தச்சூழலில் சாதனைபடைத்த யுகேஜி மாணவன் சாய்கீர்த்திக்கு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 49 பேர் தேச துரோக வழக்கு - வைகோ கடும் கண்டனம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் சாய்கீர்த்தி என்ற மாணவர் யுகேஜி படித்து வருகிறார். அவர் படித்த பள்ளியில் 'குளோபல் புக் ரிசர்ச் பவுண்டேஷன்' சார்பில் சிறுவர்களுக்கான நுண்ணறிவு போட்டி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சாய்கீர்த்தி 5 நிமிடம் 19 வினாடிகளில் 200 நாடுகளின் தேசிய கொடியை பார்த்து அந்நாட்டின் பெயர், தலைநகரத்தை கூறி அசத்தியுள்ளார்.

இதன்மூலம் அவர், சில்ட்ரன் ரெக்கார்டு, நேஷனல் ரெக்கார்டு, ஆசிய-பசுபிக் ரெக்கார்டு, குளோபல் ரெக்கார்டு ஆகிய நான்கு பிரிவுகளில் சாதனைபடைத்துள்ளார்.

சாதனைபடைத்த சிறுவன் சாய்கீர்த்தி

இதன் பின்னர் சாய்கீர்த்திக்கு 'குளோபல் பவுண்டேஷன்' சார்பில் நான்கு பிரிவுகளில் சாதனைபடைத்தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும், இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு பரிந்துரைக்கப்படவுள்ளதாக குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்தச்சூழலில் சாதனைபடைத்த யுகேஜி மாணவன் சாய்கீர்த்திக்கு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 49 பேர் தேச துரோக வழக்கு - வைகோ கடும் கண்டனம்

Intro:அரியலூர் &- 200 நாடுகளின் தேசியக் கொடியை வைத்து நாட்டின் பெயர் அதன் தலைநகரம் கூறி அசத்திய யூகேஜி மாணவன்Body:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் சாய்கீர்த்தி என்ற மாணவன் யுகேஜி படித்து வருகிறான். இவன் பொது அறிவில் சிறந்த மாணவனாக இருந்தார் இந்நிலையில் பள்ளியில் குலோபல் புக் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் சிறுவர்களுக்கான நுண்ணறிவு போட்டி நடைபெற்றது இதில் கலந்துகொண்ட சாய் கீர்த்தி 5 நிமிடம் 19 வினாடிகளில் 200 நாடுகளின் தேசிய கொடியை பார்த்து அந்நாட்டின் பெயர் மற்றும் அந்நாட்டின் தலைநகரம் கூறி அசத்தினார்

இதனையடுத்து குலோபல் புக் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் சில்ட்ரன் ரெக்கார்ட், நேஷனல் ரெக்கார்டு, தேசிய பசுபிக் ரிக்கார்ட் மற்றும் குளோபல் ரெக்கார்டு ஆகிய நான்கு சாதனைகளுக்கான சான்றிதழ்களை குலோபல் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் வழங்கி பாராட்டினர் ஆசியா அளவில் இவ்வகையான சாதனையை சிறிய வயதில் இதுவரை யாரும் நிகழ்த்தவில்லை இச் சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் 200 நாடுகளுக்கும் மேல் தேசியக்கொடியை பார்த்து நாட்டின் பெயர் மற்றும் அந்நாட்டின் தலைநகரம் பெயரை 5 நிமிடம் 19 வினாடிகளுக்குள் கூறினால் மட்டுமே இதனை முறியடிக்க முடியும்.எனவே இச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு பரிந்துரைக்கப்பட உள்ளதாக குலோபல் புக் ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்தனர் Conclusion:4 சாதனைகளைப் படைத்த யுகேஜி மாணவனை அப்பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.