100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குநர்கள், 100 பாடகர்கள் என்ற திட்டத்தோடு கவிஞர் வைரமுத்து 100 பாடல்களை எழுதியுள்ளார். அதற்கு நாட்படு தேறல் என்ற பெயரிட்டு வாரம் ஒரு பாடலை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த வாரம் நாக்கு செவந்தவரே என்ற பாடல் வெளியாகியது. இன்று (ஏப். 25) 'இந்த இரவு தீர்வதற்குள்ளே' என்ற பாடலை வெளியிட்டுள்ளார். அணில் ஶ்ரீனிவாசன் இசையமைத்துள்ள இப்பாடலை ஸ்ரவன் பாடியுள்ளார்.
இதையும் படிங்க: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் கௌதம் மேனன்?