ETV Bharat / city

பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணின் உயிரைப் பறித்த கார்! - vellore district news

வேலூர்: ஆம்பூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த, முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

வேலூரில் விபத்து
author img

By

Published : Oct 28, 2019, 6:40 PM IST

Updated : Oct 28, 2019, 9:33 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயா பேருந்துக்காகக் காத்திருந்தார்.

தீபாவளிப் பண்டிகை கொண்டாடிவிட்டு, பலகாரங்களை திருப்பத்தூரில் உள்ள சகோதரி வீட்டிற்கு எடுத்துச் செல்ல காத்திருந்துள்ளார். அப்போது, சென்னையிலிருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று, அங்கு நின்றிருந்த நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மீது மோதி நிலைதடுமாறி பேருந்துக்காக நின்று கொண்டிருந்த விஜயா மீது மோதியது.

#SaveSujith மீண்டு வா சுஜித்! - முதன்மை தகவல்கள் உடனுக்குடன்

இதில், விஜயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் புதருக்குள் விழுந்த காரை கிரேன் மூலம் மீட்டனர், மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காரின் ஓட்டுநர் சரவணன் என்பவரைத் தேடி வருகின்றனர்.

பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் உயிரை பறித்த கார்

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயா பேருந்துக்காகக் காத்திருந்தார்.

தீபாவளிப் பண்டிகை கொண்டாடிவிட்டு, பலகாரங்களை திருப்பத்தூரில் உள்ள சகோதரி வீட்டிற்கு எடுத்துச் செல்ல காத்திருந்துள்ளார். அப்போது, சென்னையிலிருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று, அங்கு நின்றிருந்த நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மீது மோதி நிலைதடுமாறி பேருந்துக்காக நின்று கொண்டிருந்த விஜயா மீது மோதியது.

#SaveSujith மீண்டு வா சுஜித்! - முதன்மை தகவல்கள் உடனுக்குடன்

இதில், விஜயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் புதருக்குள் விழுந்த காரை கிரேன் மூலம் மீட்டனர், மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காரின் ஓட்டுநர் சரவணன் என்பவரைத் தேடி வருகின்றனர்.

பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் உயிரை பறித்த கார்
Intro:ஆம்பூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் உயிரிழப்பு
Body:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் சென்னை -- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் பேருந்து நிறுத்தத்தில் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயா என்பவர் தீபாவளி பண்டிகை கொண்டாடிவிட்டு பலகாரங்கள் செய்து அதனை திருப்பத்தூரில் அக்கா வீட்டிற்கு எடுத்து செல்ல பேருந்துக்காக நின்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று அங்கிருந்த காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மீது மோதிவிட்டு பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் மீது மோதியதில் அதே பகுதியை சேர்ந்த விஜயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய போலீஸார் விபத்தில் இறந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விபத்தை ஏற்படுத்தி விட்டு புதருக்குள் நுழைந்த காரை கிரேன் மூலம் மீட்கபட்டு இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் ஓட்டுநர் சரவணன் என்பவரை தேடி வருகின்றனர்


Conclusion:
Last Updated : Oct 28, 2019, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.