ETV Bharat / state

குட்கா விவகார வழக்கில் நாளை தீர்ப்பு - உயர் நீதிமன்றம்

author img

By

Published : Aug 24, 2020, 7:06 PM IST

Updated : Aug 24, 2020, 11:22 PM IST

Madras high court
சென்னை உயர் நீதிமன்றம்

18:59 August 24

சென்னை:சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதாக உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை (ஆகஸ்ட் 25) தீர்ப்பு வழங்குகிறது.

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள்கள் காவல்துறை உதவியோடு கடைகளில் விற்பனை செய்வதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளை கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக சட்டபேரவை உரிமை குழு எடுத்த நடவடிக்கையில் அனுப்பப்பட்ட உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ க்களும் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 7இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திமுக எம்.எல்.ஏ க்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த தடையை நீக்க கோரி சட்டபேரவை செயலர் தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் பின்னர் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்குகளில் தற்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், ஆகஸ்ட் 12 முதல் 2 நாட்கள் இறுதி விசாரணை நடைபெற்றது.

சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெ.அன்பழகன், திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி ஆகியோர் மரணமடைந்ததாலும், திமுகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கு.க.செல்வத்துக்காக நாங்கள் ஆஜராகவில்லை என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் திமுக தரப்பு வாதத்தையே தன் தரப்பு வாதமாகவும் ஏற்றுக்கொள்ளும்படி கு.க.செல்வம் தரப்பில் ஒரு கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கு.க செல்வம் தனியாக தாக்கல் செய்த மனுவையும் வழக்கில் இணைத்த நீதிபதிகள் ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு நாளை (ஆகஸ்ட் 25) தீர்ப்பளிக்க உள்ளது.

இதையும் படிங்க: எஸ்.வி.சேகர் மீதான தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு: காவல் துறை விளக்கமளிக்க உத்தரவு

18:59 August 24

சென்னை:சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதாக உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை (ஆகஸ்ட் 25) தீர்ப்பு வழங்குகிறது.

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள்கள் காவல்துறை உதவியோடு கடைகளில் விற்பனை செய்வதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளை கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக சட்டபேரவை உரிமை குழு எடுத்த நடவடிக்கையில் அனுப்பப்பட்ட உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ க்களும் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 7இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திமுக எம்.எல்.ஏ க்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த தடையை நீக்க கோரி சட்டபேரவை செயலர் தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் பின்னர் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்குகளில் தற்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், ஆகஸ்ட் 12 முதல் 2 நாட்கள் இறுதி விசாரணை நடைபெற்றது.

சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெ.அன்பழகன், திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி ஆகியோர் மரணமடைந்ததாலும், திமுகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கு.க.செல்வத்துக்காக நாங்கள் ஆஜராகவில்லை என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் திமுக தரப்பு வாதத்தையே தன் தரப்பு வாதமாகவும் ஏற்றுக்கொள்ளும்படி கு.க.செல்வம் தரப்பில் ஒரு கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கு.க செல்வம் தனியாக தாக்கல் செய்த மனுவையும் வழக்கில் இணைத்த நீதிபதிகள் ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு நாளை (ஆகஸ்ட் 25) தீர்ப்பளிக்க உள்ளது.

இதையும் படிங்க: எஸ்.வி.சேகர் மீதான தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு: காவல் துறை விளக்கமளிக்க உத்தரவு

Last Updated : Aug 24, 2020, 11:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.