தெலங்கானா: செகந்திராபாத்தில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில், ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை, தட்சின் பாரத் பகுதியின் ராணுவ மருத்துவமனைக்கான ஜெனரல் ஏ அருண் GOC (GENRAL OFFICER COMMANDING) நேற்று (ஜூன்.19) திறந்து வைத்தார்.
ஆக்ஸிஜனை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு (CSR) Corporate Social Responsibility முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ஆலை ராணுவ மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது என்று பாதுகாப்பு பிரிவின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை ஒவ்வொரு நிமிடமும் 960 லிட்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது, மேலும் ஆலை உருவாக்கத்தில் கோயம்புத்தூரிலுள்ள ட்ரைடென்ட் நியூமேடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் பங்கேற்றுள்ளது.
தெலங்கானாவில் கரோனா தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனா தொற்றிலிருந்து 5,88,259 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3,546 பேர் உயிரிந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சபாநாயகராக 2 ஆண்டுகள் நிறைவு.. ஓம் பிர்லாவை பாராட்டிய மோடி..