ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவிற்கு ரூ.16 கோடி விலையுள்ள ஊசி போட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக சிறுவன் நீண்ட காலமாக முதுகெலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜெய்பூரில் உள்ள ஜேகே லோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மதிப்புள்ள 'ஜோல்ஜென்ஸ்மா' ஊசி போட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் சிறுவனுக்கு தற்போது 2 வயது உள்ளதால் ஊசிக்குப் பதிலாக வாய் வழியாக வழங்கப்படும் 'ரிஸ்டிப்லாம்' என்ற மருந்தை பரிந்துரைத்தனர்.
இந்த மருந்தின் விலை ரூ.72 லட்சமாகும். சிறுவனின் எடைக்கேற்ப வழங்கப்படும் 'ரிஸ்டிப்லாம்' மருந்தின் விலை ரூ.30 முதல் ரூ.32 லட்சம் வரை இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவனின் தந்தையால் இந்த தொகையை செலுத்த முடியாத காரணத்தால் அம்மாநில சுகாதார அமைச்சர் பர்சாதி லால் மீனாவிடம் உதவி கோரினார்.
தற்போது குழந்தைக்கு வாய்வழி மருந்து வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசியை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் அரசிடம் சிறுவனின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கர்நாடகா: தாழ்த்தப்பட்ட பெண் குழாயில் நீர் குடித்ததால் காலியாக்கப்பட்ட டேங்க்