இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,
கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு கிடைத்துள்ளதால், டெங்கு பாதிப்பு 75 விழுக்காடு குறைந்துள்ளது.
2016ஆம் ஆண்டு 400 பேரும் 2017ல் நான்காயிரம் பேரும் 2018ல் 500 பேரும் 2019ஆம் ஆண்டு ஆயிரத்து 10 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகம் என்றாலும், இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்தாண்டு டெங்குவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 10 பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.
புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறை மூலம் மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளிக்கப்படுவதால் டெங்குவால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மேலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஏனாம் பகுதிக்கு சென்றது தனிப்பட்ட பயணம். ஏனாம் தீவு விவகாரத்தில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது தாராளமாக கிரண்பேடி நடவடிக்கை எடுக்கட்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : 5 வயது சிறுவனை காவு வாங்கிய காய்ச்சல்: டெங்குவா? மர்மமா?... அரசு மருத்துவமனையில் அலட்சியம்