மத்திய வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தம், மேற்கு மத்திய வங்காள விரிகுடாவிற்கு நகர்ந்துள்ளது என்று ஹைதராபாத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் இது வடமேற்கு நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதாக ஹைதராபாத்தில் உள்ள ஐஎம்டியின் இயக்குநர் கே.நகரத்னா தெரிவித்துள்ளார்.
மேலும், “அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் நாளை (அக்.22) முதல் மழை குறைய வாய்ப்புள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.