திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் இன்று (செப்.29) கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் பகுதியில் உள்ள காலபைரவர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தபோது, நாட்றம்பள்ளி அடுத்த பையனப்பள்ளி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
அந்த உணவகத்தில் இருந்து வாங்கப்பட்ட சமோசா தரமற்ற நிலையிலும், அவரது 4 வயது பெண் குழந்தை குடித்த பாதாம் மில்க் கெட்டுப்போன நிலையிலும் இருந்ததாக அவர், உணவக உரிமையாளரிடம் குற்றம் சாட்டி அது குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு உணவக உரிமையாளர் முறையான பதில் அளிக்காமல் அநாகரிகமாக பேசியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.