சிறுத்தை மீது மோதிய இரு சக்கர வாகனம்; மயங்கிய சிறுத்தை திடீரென ஓட்டம்! - LEOPARD IN GUDALUR
🎬 Watch Now: Feature Video


Published : Feb 27, 2025, 5:59 PM IST
நீலகிரி: கூடலூரில் இருந்து கேராளாவிற்கு செல்லும் சாலையில் மரப்பாலம் பகுதியில் திடீரென சாலையக் கடந்த சிறுத்தை மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறிது நேரம் மயக்க நிலையில் இருந்த சிறுத்தை, திடீரென எழுந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.
நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டதாகும். இப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கூடலூரில் இருந்து கேராளாவிற்கு செல்லும் சாலையில் மரப்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், எதிர்பாராத விதமாக திடீரென சாலையை கடந்த சிறுத்தை மீது மோதியுள்ளார். இதில், சிறுத்தை மயங்கி சாலையில் விழுந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறிது நேரம் மயக்க நிலையில் இருந்த சிறுத்தை திடீரென எழுந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.