ஆம்பூரில் இருசக்கர வாகனம் திருட்டு; சிசிடிவி காட்சி - A complaint was lodged at the Ambur City Police Station
திருப்பத்தூர்: ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் வங்கியில் (பேங்க் ஆப் மகாராஷ்டிரா ) பாரதம்பட்டறையை சேர்ந்த சஞ்சீவி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை (SPLENDER +) வங்கி வெளியே நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. உடனடியாக வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் காவல்துறையினர் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
TAGGED:
Private Bank of Maharashtra