குறுவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டியை தொடங்கி வைத்த தென்காசி எம்எல்ஏ - Palani Nadar MLA
தென்காசியில் தனியார் பள்ளி சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார். இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த போட்டியில் 28 அணிகள் களம் காண்கிறது.