குடியரசுத் தலைவர் தேர்தல் - வாக்களித்தார் மு.க.ஸ்டாலின்.. - சென்னை தலைமை செயலகம்
சென்னை: தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 18) நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் அவர் முதல் நபராக தனது வாக்கை செலுத்தினார்.