வேஸுக்கோ, தீஸுக்கோ - கோவையில் செளடேஸ்வரி அம்மனுக்காக நடந்த கத்தி போடும் திருவிழா - Covai Sowdeswari Amman temple
கோவை: ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி, ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் நடக்கும் கத்திபோடும் திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், 'வேஸுக்கோ, தீஸுக்கோ செளடம்மா' என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை வழிபட்டனர். இதனால், உடலில் ஏற்பட்ட காயங்களின்மீது திருமஞ்சனப்பொடி தூவப்பட்டது. இதன் நிறைவாக, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.