Video: கரும்பு லாரியை வழிமறித்த யானை - மரத்தின் மீது ஏறி தப்பிய ஓட்டுநர்
ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று ஆசனூர் வழியாக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, காரப்பள்ளம் என்ற இடத்தில் குட்டி யானையுடன் வனப்பகுதியைவிட்டு வெளியேறிய காட்டு யானை கரும்பு லாரியை வழிமறித்து, லாரியில் இருந்த கரும்புத்துண்டுகளை எடுத்து தின்றது. இதனால், அச்சமடைந்த லாரி ஓட்டுநர் அருகே இருந்த மரத்தின் மீது ஏறிய வீடியோ வெளியாகியுள்ளது.