தமிழ்நாடு

tamil nadu

Exclusive Video: செங்கல்பட்டு அரசு மருத்துவரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - முதலமைச்சர் தலையிட வேண்டும்!

By

Published : Aug 12, 2022, 12:37 PM IST

Updated : Aug 12, 2022, 1:54 PM IST

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிலைய பொறுப்பு மருத்துவராக பணியாற்றி வந்த தீனதயாளன், அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஊழல், திருட்டு, பாலியல் அத்துமீறல் போன்றவை குறித்து 200 பக்க புகார் அறிக்கை முறைப்படி உயர் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார். எந்த நடவடிக்கையும் இல்லாததால், சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து ஆதாரங்களை அளித்துள்ளார். ஆனால், இதற்கு முறையான நடவடிக்கை இல்லை என்றும், தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதில் முதலமைச்சர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தீனதயாளன், ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியை காணலாம்.
Last Updated : Aug 12, 2022, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details