இடுக்கி அருகே சாலையின் நடுவே குட்டியை ஈன்ற யானை - நடுரோட்டில் குட்டி ஈன்ற யானை
கேரளா: இடுக்கி மாவட்டத்திலுள்ள சின்னார் வனவிலங்கு சரணலாயத்திற்குட்பட்ட மலைச்சாலையில் இன்று (ஜூலை 6) அதிகாலை 5 மணியளவில் காட்டு யானை ஒன்று சாலையில் நடுவே குட்டியை ஈன்றது. இதனால், இந்த வழி தடத்தில் சுமார் ஓன்றரை மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த தகவல் தெரிந்த கரிமூட்டி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தாய் மற்றும் குட்டி யானையை வனப்பகுதிக்குள் செல்லும் வரை வனத்துறையினர் பாதுகாத்து நின்றனர்.