அரியலூரில் செவிலியர் தின விழா கொண்டாட்டம்! - world nurse day celebration
அரியலூர்: உலகம் முழுவதும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான இன்று 'செவிலியர் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரியலூரில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.