குழந்தையுடன் வெள்ளத்தில் சிக்கிய பெண்... - Woman who trapped in flood with baby was recued
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு பெண் தனது குழந்தையுடன் சிக்கி கொண்டார். இதனைக் கண்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அவர்களை பத்திரமாக மீட்டனர். இதில், இரண்டு இளைஞர்கள் தவறி வெள்ளத்தில் விழுந்த நிலையில் அவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.