வால்பாறை தனியார் எஸ்டேட்டில் புற்றை வணங்கிய காட்டுயானை...! - Coimbatore District News
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வனத்தில் இருந்து விலங்குகள் வெளியேறி தனியார் எஸ்டேட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இந்நிலையில், காட்டு யானை ஒன்று தனியாருக்குச் சொந்தமான வாட்டர் பால் ரேகன் டியூசன் பகுதியில் உள்ள நாக கன்னியம்மன் கோயிலில் உள்ள புற்றை வணங்குவதை ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். தற்போது, இந்த காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.