திருப்பத்தூரில் கனமழை; இடிந்து விழுந்த வீட்டின் சுவர்கள் - கனமழை
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. குறிப்பாக லஷ்மி நகர் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக சிலரது வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன.