மயிலாடுதுறை காவிரி ஆறு துலாக்கட்ட விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேகம் - tulakkad viswanathar temple maha kumbabhishekam
மயிலாடுதுறை காவிரி ஆறு துலாக்கட்ட விஸ்வநாதர் ஆலயத்தில் 66 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் விழா இன்று (அக்.28) நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விசுவநாதர் மற்றும் விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், துழாவூர் ஆதீனம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.