சூறைக் காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை! - people get happy after heavy rainfall at tiruvannamalai
திருவண்ணாமலை: மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், நேற்று திடீரென்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. குறிப்பாக செங்கம், புதூர், புதுப்பேட்டை, தண்டம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.