குட்டிகளுடன் கம்பீரமாக நடந்து வந்த புலி - கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் - முதுமலை புலிகள் காப்பகம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி ஒன்று தனது மூன்று குட்டிகளுடன் கம்பீரமாக நடை நடந்து வந்தது. ராஜ நடைபோட்ட புலியை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சிறிது நேரம் வனப்பகுதில் இருந்து நடந்து வந்த புலி பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.