கோவையிலுள்ள வ.உ.சி. பூங்காவில் கண்ணாடி விரியன் பாம்பு 33 குட்டிகளை ஈன்றது. கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகளை ஈன்றால், அதுவே தனது குட்டிகளை விழுங்கிவிடும். இதனால் பூங்காவின் பராமரிப்பாளர்கள் பாம்பு குட்டிகளைப் பத்திரமாக மீட்டு வேறு பகுதியில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். கண்ணாடி விரியனின் 33 குட்டிகளுமே ஆரோக்கியமாக இருப்பதால் சில நாள்கள் கழித்து வனப்பகுதியில் விட இருப்பதாக பூங்காவின் மருத்துவர் செந்தில் தெரிவித்துள்ளார்.
TAGGED:
கோயம்புத்தூ வஉசி பூங்கா