20 நிமிடம் போராடி விடாமுயற்சியால் காட்டாற்றை கடந்த நாய்! - erode latest news
ஈரோடு: சத்தியமங்கலம் அருகேயுள்ள புளியங்கோம்பை கிராமத்தில் வசிக்கும் மக்கள் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக காவல் நாய்களை வளர்த்துவருகின்றனர். கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழையால் அந்த கிராமத்திலுள்ள காட்டாற்றில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கிராம மக்களே ஆற்றைக் கடக்க அச்சப்படும் நிலையில், காவல் நாய் ஒன்று 4 முறை தோல்விக்குப் பின் 20 நிமிடம் போராடி ஐந்தாவது முறையாக பாறைகளின் மீது தாவி குதித்து காட்டாற்றை கடந்து சென்றது.