கோயில் யானை அபயாம்பிகை மழையில் நனைந்து குதூகலம்! - temple elephant abayambigai recent news
மயிலாடுதுறை: காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் வெள்ளிரதத்தில் சுவாமி அம்பாளையும், மரரதத்தில் விநாயகர், முருகனையும் வைத்து ஆலய பிரகாரத்தைச் சுற்றி கொண்டு வரப்பட்டது. மழையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அபயாம்பிகை யானை உற்சாகம் அடைந்து தரையில் தேங்கிய மழை நீரை உறிஞ்சி தன்மேல் பீய்ச்சியடித்து விளையாடியது.