கோலகலமாக நடைபெற்ற புனித ஃபிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா - mayiladuthurai news
மயிலாடுதுறை: பிரசித்திப் பெற்ற புனித ஃபிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத் திருவிழா கடந்த நவம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாள்கள் பல்வேறு நிகழ்வுகள் இந்த ஆலயத்தில் நடைபெற்றது. தொடர்ந்து புனித சவேரியாரின் உருவம் தாங்கிய தேர்பவனி நேற்றிரவு (டிசம்பர் 2) நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர்பவனி அரசு மருத்துவமனை சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.