ஸ்ரீரங்கம் கோயில் சிறப்பாகப் பராமரிப்பு - முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் - srirangam temple cm Chandrashekar Rao
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஸ்ரீரங்கத்தில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஸ்ரீரங்கம் கோயிலை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசுக்கு நன்றி. நாளை (டிசம்பர் 14) சென்னையில் முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரை சந்தித்துப் பேச உள்ளேன்" என்றார்.