அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் விபத்து: 17 பேருக்கு லேசான காயம் - coimbatore district news
கோயம்புத்தூரில் இருந்து ஆனைக்கட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து தடாகம் பகுதியில் இந்திரா நகர் பாலம் அருகே பிரேக் பிடிக்காததால் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் உள்ளிட்ட 17 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அரசு போக்குவரத்து கழகம் உடனடியாக அனைத்து பேருந்துகளையும் பழுது பார்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.