பொள்ளாச்சி அருகே அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை! - latest Coimbatore news
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகேயுள்ள கோபால்சாமி மலைப் பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிவதால், அங்குள்ள பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடிய விரைவில் காட்டுயானையை வனப்பகுதியில் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கும்படி, அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.