சத்தியமங்கலத்தில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள்
ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்ததால் வறண்டு கிடந்த வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் துளிர் விட்டு காட்சியளிக்கின்றன. இந்நிலையில், அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த செங்காந்தள் மலர்கள், அப்பகுதியில் பூத்துக் குலுங்குவதால் சத்தியமங்கலம் வனப்பகுதியே அழகாக மாறியுள்ளது.