தொடர் கனமழை நீரில் மூழ்கிய சம்பா பயிர்களால் விவசாயிகள் வேதனை - தொடர் கனமழை
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக இடியாற்றின் கரை உடைந்து சுமார் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் அழுகி போகியுள்ளன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.