தோட்டத்தில் சிக்கிய 8அடி நீள மலைப்பாம்பு- பீதியில் பொதுமக்கள் - kanyakumari district news
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை நான்கு வழிச் சாலை அருகே முரளி என்பவர் வீட்டோடு அமைந்துள்ள தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கறவை பசுக்களை வைத்து பால் கறந்து விற்பனை செய்து வரும் இவர் இன்று காலை வழக்கம் போல் பால் கறப்பதற்காக பசுக்கள் நிற்கும் இடத்திற்குச் சென்றபோது, சுமார் ஒன்பது அடி நீளமுடைய மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் பிடித்து வனத்துறையினர் ஒப்படைத்தனர்.