திருவாரூர்: சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற பன்னாட்டு பெருநிறுவனங்களை முற்றிலுமாக தடை செய்யக் கோரியும், இணையதள வர்த்தகத்தை தடை செய்யக் கோரியும் நூற்றுக்கும் மேற்பட்ட 'நுகர்பொருள் வினியோகஸ்தர் சங்கத்தினர்' திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.