10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர் - 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு
கோவை: பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆழியார் புளியங்கண்டி பகுதியில் நேற்று இரவு அக்ரி அலுவலகம் அருகே மலைப்பாம்பு இருப்பதைக் கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்பு அங்கு வந்த வனத்துறையினர், 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து ஆழியார் அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.