திண்டுக்கல்லில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய காவல்துறை, தன்னார்வலர்கள் - Police providing food to the needy people on roaside
கரோனா பரவலை தடுக்க தமிழ்நாட்டில் பகல் 12 மணிக்கு மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஆதரவற்றோருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அபூதல்ஹா, தன்னார்வலர்கள் பால் தாமஸ், ஜஸ்டின் ஆண்டனி ராஜா ஆகியோர் திண்டுக்கல் பேகம்பூர் அருகே ஆதரவற்றோருக்கும், முதியவர்களுக்கும் மதிய உணவு வழங்கினர்.