சென்னையில் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி, துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். அப்போது அவர்களுடன் காவல் துறையினரும் கலந்துகொண்டனர்.