தமிழ்நாடு

tamil nadu

தொடர் மழையினால் உருவான புதிய அருவி!

By

Published : Oct 11, 2020, 6:43 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அருகேயுள்ள போதமலை, பெரும்பாளி பகுதியில் சுமார் 30 அடி உயரத்திலிருந்து தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. தற்போது கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி இயங்காததால் புதியதாக உருவான பெரும்பாளி அருவியில் குளிக்க சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்தனர். தகவலிறிந்து வந்த ராசிபுரம் வனத்துறை அலுவலர்க்கள், இளைஞர்களை குளிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதால், இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.‌

ABOUT THE AUTHOR

...view details