சுருக்கு வலையைப் பயன்படுத்த அனுமதி கோரி 3ஆவது நாளாக மீனவர்கள் போராட்டம் - nagai latest news
மயிலாடுதுறை மாவட்டம் கடலோர கிராமங்களில் சுருக்கு வலையைப் பயன்படுத்த அனுமதி கோரி 13 கிராம மீனவர்கள் மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்தந்த கிராமங்களிலிருந்து நடை பயணமாகச் சென்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். மேலும், தங்கள் வாழ்வாதாரமான சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களின் போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளனர்.