ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள், அவ்வழியே செல்லும் கர்நாடகா செல்லும் லாரியிலிருந்து சாலையில் விழும் கரும்புத் துண்டுகளை தின்பதற்காக வருவது வழக்கம். அதைப் போல், கரும்பு துண்டுகளை தேடிவந்த மக்னா யானை, நெடுஞ்சாலையைக் கடந்து சென்றதோடு நீண்ட நேரம் நின்றிருந்ததால் வாகன ஒட்டிகள் அச்சம் அடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது