காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெகிழி விழிப்புணர்வு பேரணி!
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு ஆண்கள் பள்ளியில் நகராட்சி ஊழியர்கள் சார்பில் தூய்மையே சேவை நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி ஆனையார் சந்திரா தலைமையில் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்கள், கடைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்தப் பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.