மதுபாட்டிலில் பல்லி: விருதுநகர் மதுப்பிரியர் வேதனை - virudhunagar liquor bottle lizard
விருதுநகர்: அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டி, உறவினர் வீட்டு இல்ல நிகழ்ச்சிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வலையன்குளம் வந்துள்ளார். பின்னர், அங்குள்ள அரசு மதுபான கடையில் மதுபாட்டில் வாங்கியுள்ளார். அந்த மதுபாட்டிலின் பெட்டியை உடைத்துப் பார்த்தபோது பாட்டிலில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.