கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் சீசன் தொடக்கம்!
'ஏழைகளின் ஆப்பிள்' என்றழைக்கப்படும் பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு ஆகிய மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது. குறிப்பாக, மே மாதத்தில் பிளம்ஸ் பழங்கள் மகசூல் செய்யப்படும். இவை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தற்போது வெளிமாநிலங்களுக்கு வாகன போக்குவரத்து இல்லாததால், ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த பிளம்ஸ் பழங்கள், 75 ரூபாய் அளவிற்கே விற்கப்படுகிறது. இதனால் பிளம்ஸ் பழம் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.