வேகமாகப் பரவுகிறது உருமாறிய கரோனா - உதவிப் பேராசிரியர் சுகந்தி - kilpakkam medical college assistant professor suganthi interview
சென்னை: கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மைக்ரோபையோலாஜி துறையின் உதவிப் பேராசிரியர் சுகந்தி, ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "தமிழ்நாட்டில் கரோனா தீநுண்மி தற்போது உருமாறிப் பரவிவருகிறது. இந்தத் தீநுண்மி 15 நிமிடங்களில் ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்குப் பரவும் தன்மை வாய்ந்தது. இந்தத் தீநுண்மி தாக்கினால் இணை நோய் உள்ளவர்களுக்குப் பாதிப்பு அதிகளவில் உள்ளது" எனத் தெரிவித்தார்.