சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி- கேரள அரசுப்பேருந்துகள் மறிப்பு
கோவை : சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமென, இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை காந்திபுரத்தில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் கேரள அரசுப்பேருந்துகளை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.